Panguni Uthiram 2023 பங்குனி உத்திரம் நாளில் என்னவெல்லாம் சிறப்புகள் உள்ளன தெரியுமா...?

raj 177 26/3/2023
 Panguni Uthiram 2023 பங்குனி உத்திரம் நாளில் என்னவெல்லாம் சிறப்புகள் உள்ளன தெரியுமா...?


பங்குனி உத்திரம் நாளில் என்னவெல்லாம் சிறப்புகள் உள்ளன தெரியுமா...?

பங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்தர திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும்.
இத்தினத்தில் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது. 
இளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது

நன்னாளில் எல்லா முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம், மதுரை, கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீ வில்லிபுத்தூர், மோகூர், எம்பெருமான் திருக்கல்யாணம் நடக்க உள்ளன.

நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் தொடுத்த லீலையும், காரையார் சொரி முத்தையனார் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் நடைபெற உள்ளது.

அழகன் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள். செல்வம் படைத்த ஆன்மீக மெய்யன்பர்கள்  இந்நாளில் முருகப் பெருமானுக்கு திருமணம் செய்விக்கலாம்.

மாதம் மாதம் உத்திரம் நட்சத்திரம் வந்தாலும் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் வரக்கூடிய உத்திரம் நட்சத்திரத்திற்கு மகிமை அதிகம் என்று சொல்லலாம். இந்த பங்குனி உத்திரம் நட்சத்திரம் அன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் இந்த நன்னாளில் விருத்தம் இருந்து முருகனை நெஞ்சுருக வழிபடுவார்கள். தமிழ் மாதத்தின் 12-வது மாதம் தான் இந்த பங்குனி மாதம் ஆகும். நட்சத்திரங்கள் வருசையில் 12-வது நட்சத்திரமாக வருவது உத்திரம் நட்சத்திரம் ஆகும். இவை இரண்டும் இணைத்து வரக்கூடிய நன்னாளை தான் பங்குனி உத்திரம் என்று அழைக்கப்படுகிறது. சரி இந்த பதிவில் பங்குனி உத்திரம் சிறப்புகள் பற்றி சிலவற்றை படித்தறியலாம் வாங்க.

பங்குனி உத்திரம் சிறப்புகள்:

1)இந்த பங்குனி உத்திரம் நட்சத்திரத்திற்கு அதிக மகத்துவம் உள்ளதாம். ஏனென்றால் இந்த நட்சத்திரத்தில் தான் தெய்வத்திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.
2)12-வது மதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணைகின்ற புண்ணிய நாளை தான் இந்த பங்குனி உத்திரம் ஆகும்.
3)பங்குனி உத்திரம் நாளில் எடுக்கும் விருத்தத்தினை கல்யாணம் விருத்தம், திருமணம் விருத்தம் என்று சொல்வார்கள்.
4)சிவன் அன்னை பார்வதி தேவி இருவரும் மணக்கோலத்தில் சுந்திரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி அளித்த திருநாள் பங்குனி உத்திரம் அன்று தான்.
5) அன்னை மீனாட்சியை திருமணம் செய்து, மீனாட்சி சுந்தரேஸ்வரராக காட்சியளித்ததும் பங்குனி உத்திரம் திருநாளில் தான்.
6) சிவபெருமானின் தவத்தை காலத்தால் சிவனின் நெற்றி கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். இருப்பினும் ரதியின் வேண்டுதலினால் மன்மதன் மீண்டும் உயிர் பேற்றை நாள் இந்த பங்குனி உத்திரம் நன்னாளில் தான்.

7)தமிழ் கடவுளான முருகன் தெய்வானையை இந்த பங்குனி உத்திரம் நன்னாளில் நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். மேலும் வள்ளியின் அவதார தினமும் அந்நாள் தான்.
8)ஸ்ரீ ரங்கம் மன்னர் – ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இந்த நன்னாளில் தான்.
9)9) மகாலட்சுமி பங்குனி உத்திரம் விருத்தினை மேற்கொண்டு ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்ற நாள். அதேபோல் மகாலட்சுமி அவதரித்த நன்னாளும் இந்த பங்குனி உத்திரம் நாளில் தான்.
10) தேவேந்திரன் – இந்திராணி, நான்முகன்- கலைவாணி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன.
11) இந்த பங்குனி உத்திரம் நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாருமன், திருமாலும் காட்சி தருவார்கள். மேலும் காஞ்சிவரதராஜர் கோயிலில் ஸ்ரீ பெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, மலையாள நாச்சியார் ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீ வரதராஜர் காட்சி தருவார்.

12)தேவேந்திரன் – இந்திராணி, நான்முகன் கலைவாணி கல்யாணமும் இந்த பங்குனி உத்திரம் திருநாளில் தான் நிகழ்ந்தது.
13)தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன்- சீதை, லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்-மாண்டவி, சத்ருக்னன் – ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
14)சந்திரன் அழகுமிகு 27கன்னியர்களை மனைவியாக ஏற்றுக்கொண்ட நாளும் பங்குனி உத்திரம் நாளில் தான்.
15)15) 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறு பிறவி தெய்வத் பிறவியாக அமையும்.


கோடீஸ்வர யோகம் கிடைக்கும்
பங்குனி உத்திர விரதம் இருந்தால் நோய்கள் நீங்கி கணவன் மனைவி ஆயுள் அதிகரிக்கும். வீட்டில் பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். செல்வ வளம் அதிகரிக்கும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். திருமணமான பெண்கள் பங்குனி உத்திர நாளில் புது தாலி மாற்றிக்கொள்வதன் மூலம் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.