பௌர்ணமியின் மகத்துவம் | Magnificence of the full moon

Uma 87 22/10/2023
 பௌர்ணமியின் மகத்துவம் | Magnificence of the full moon

பௌர்ணமியின் மகத்துவம்  

பௌர்ணமி நாள் :

 

            பெளர்ணமி என்பது முழுநிலவு, முழுமதி அல்லது பவுர்ணமி என்பது புவியில் இருந்து காணும் போது நிலவு முழுமையான வெளிச்சத்துடன் தோற்றமளிக்கும் நாளாகும்.

            இந்து சமயத்தில் திதிகள் என்று அழைக்கப்படும் சந்திர நாட்களில் பௌர்ணமியும்  ஒன்று.

            பழங்காலத்தில் நம் முன்னோர்கள்  நாள்காட்டியை பார்க்காமல் "இன்று பௌர்ணமி, இன்று அமாவாசை" என்று தங்கள் உள்  உணர்வில் சொன்னவர்கள் .
            பொதுவாக, சந்திரன் முழுமையாக ஒளிரும் போது, ​​ முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள் , அது முழு நிலவு என்று அழைக்கப்படுகிறது. பௌர்ணமி நாளில் மனம் அமைதியாக இருக்கும்.
            முழு நிலவு பௌர்ணமியில் பல வகைகள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட பௌர்ணமிகள் இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. 
            ஒவ்வொரு பௌர்ணமி வழிபாடும் வெவ்வேறு பலன்களைத் தரும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
            வளர்பிறை நிலவு, தேய்பிறை நிலவு, பகல் தொடங்கி இரவில் முடிவது, பாதி பகல் நிலவு இருப்பது என்று விதவிதமான  பௌர்ணமி நேரங்கள் வெவ்வேறு பலன்களைத் தரும்.
     இந்நாளில்  பூமியில் மேல்நோக்கி வளரும் தாவரங்கள் கூட சற்று அதிக உயரமாக வளரும் தன்மை உடையனவாக உள்ளது.  
பௌர்ணமியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வோம்:

 

            ஒரு மாதத்தில் வரும் 2  பௌர்ணமிகளில் நாம் கட்டாயம் இறைவழிபாடு மேற்கொண்டால் நமக்கு நல்ல விஷயங்கள்  நடக்கும்..
            பௌர்ணமியில் கோவிலுக்கு செல்வது, மலை மேல் ஏறுவது, வலம் வருவது போன்ற விஷயங்களை செய்யும் போது நம் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இதனால் மனநலம் சார்ந்த நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்
            இந்த நாளில், நல்ல அதிர்வலைகள் ஏற்படும்.  இத்தகைய சக்தி வாய்ந்த நாளில், தேவி வழிபாடு செய்வது தீயசக்தியில் இருந்து நம்மைக் காக்கும். அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் வாழ்வில் இதுவரை பட்ட தொல்லைகள் , கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.
            கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வழிபாடு செய்யலாம்.ஒவ்வொரு  பெளர்ணமியன்றும் மாலையில், சந்திரன் தோன்றும்  போது, வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து அம்பாளை வழிபடுவது சிறப்பு. 
            எந்த நாளாக இருந்தாலும் பரவாயில்லை, பௌர்ணமி அன்று வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள் , அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
            இந்த  பௌர்ணமியில் ஆணோ பெண்ணோ எந்த குழந்தையாக இருந்தாலும் பிறக்கலாம். 
            அதைப்போல், பௌர்ணமியில் பிறந்த குழந்தைகள் செல்வம், புகழ், பொருளாதார நிலை ,கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இவர்களுக்கு மதிப்பு, மரியாதையும் அதிகரிக்கும் எனக் கூறுகின்றனர்.
            இந்த பெளர்ணமி நாளை சந்திரக் குளியல் (Moon Bath), சந்திர ஸ்நானம் என்று சொல்லலாம். 
இந்த நாளில் நாம் வீட்டிற்குள்ளேயே இருக்காமல், மொட்டை மாடிகள் மற்றும்  திறந்தவெளிகளுக்கு வெளியே வந்து சந்திரனின் அழகை தரிசித்து , அதன் கதிர்கள் நம்மீது படும்படி இருந்தால் நமக்கு நன்மை பயக்கும்.