கந்தர் அனுபூதி படித்தால் வருமானம் பெருகுமா? " காஞ்சி மகா பெரியவா அருளிய அறிவுரை | Does reading Kandar Anuphuti increase income? Kanji Maha Periyava's blessed advice

sathiya 30 05/5/2024
 கந்தர் அனுபூதி படித்தால் வருமானம் பெருகுமா?

காஞ்சி மகா பெரியவா அருளிய அறிவுரைகளும் இன்றும் எத்தனையோ பேருக்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள்களே உதாரணம்.
அப்படி பக்தர் ஒருவருக்கு கந்தர் அனுபூதி பற்றி ஏற்பட்ட சந்தேகத்தை நீக்கியதுடன், வருமானத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என அனைவருக்கும் வழிகாட்டி உள்ளார்.

வருமானம் பெருக கந்தர் அனுபூதி :

தீராத வறுமை, கடன் ஆகியவற்றில் இருந்து மீள முடியாமல் தவித்த முருக பக்தர் ஒருவர், எத்தனையோ வழிபாடுகளை செய்த விட்டு கடைசியாக, அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதியை பாராயணம் செய்ய துவங்கினார். தினமும் தவறாமல், முருகன் முன் அமர்ந்து கந்தர் அனுபூதி பாராயணம் செய்தார்.

ஆனாலும் வறுமை நீங்கவில்லை. கடனும் தீரவில்லை. இதனால் மனம் வருந்திய அந்த முருக பக்தருக்கு மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. செல்வம் வளம் சேர வேண்டும் என்றால் மகாலட்சுமியை வணங்கி, அவருக்கு உரிய ஸ்லோகம், மந்திரங்களை தானே பாராயணம் செய்ய வேண்டும். நாம் தான் தெரியாமல் தவறாக கந்தர் அனுபூதியை படித்துக் கொண்டிருக்கிறோமோ என குழப்பத்தில் ஆழ்ந்தார்.

தனது குழப்பத்தையை, சந்தேகத்தை யாரிடம் கேட்டு தெளிவு பெறுவது என யோசித்த அந்த பக்தருக்கு காஞ்சி மகா பெரியவாவின் நினைவு வந்தது. நேராக காஞ்சிபுரம் புறப்பட்டு சென்றார். மகா பெரியவாவை தரிசித்து, ஆசி பெற்றார். பிறகு சற்று தயக்கத்துடன், "சுவாமி...எனக்கு மனதில் ஒரு சந்தேகம், குழப்பம் எழுந்துள்ளது. அதை நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்" என கேட்டார்.

என்ன சந்தேகம் என கேட்ட மகா பெரியவாவிடம், " எனக்கு தற்போதைய முதல் தேவை பணம் தான் சுவாமி. கடன் சுமையால் மிகவும் கஷ்டப்படுகிறேன்.வரும் வருமானம் குடும்பத்தை நடத்துவதற்கே பற்றாக்குறையாக உள்ளது. வட்டி கூட கட்ட முடியாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த சமயத்தில் பகவானை சரணடைவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. லட்சுமி கடாட்சம் பெற ஏதேனும் ஸ்லோகம் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள் " என்றார்.

இதற்கு மகா பெரியவா, "சரி உன்னுடைய தேவை, கஷ்டத்தை சொல்லி விட்டாய். சந்தேகம் என்னவென்று இதுவரை சொல்லவில்லையே" என்றார். அதற்கு அந்த பக்தர், "அது வேறு ஒன்றும் இல்லை சாமி, கஷ்டம் தீர வேண்டும் என இதுவரை கந்தர் அனுபூதியை படித்து வந்தேன். வருமானம் அதிகரிக்க கந்தர் அனுபூதியை நான் படித்தது சரியா, இல்லையா?" என கேட்டார்.

இதைக் கேட்டு லேசாக புன்னகைத்தபடி பதிலளித்த மகா பெரியவா, "முன் ஜென்ம விவைப்பயன் நீங்கும் வரை நம்பிக்கை உடன் பாராயணம் செய். அதன் பிறகு பலன் கிடைக்கும். இந்த பலன் இந்த சமயத்தில் தான் கிடைக்க வேண்டும் என கணக்கு உள்ளது. கந்தர் அனுபூதி நிச்சயம் செல்வ வளம் தரும். நம்பிக்கையுடன் தொடர்ந்து படி" என்றார். அப்படியும் சந்தேகம் நீங்காத அந்த பக்தர்,"வேறு ஏதாவது சான்று இதற்கு உள்ளதா சாமி?" என கேட்டார்.

சான்றை ஏன் வெளியில் தேடுகிறாய். கந்தர் அனுபூதியிலேயே உள்ளதே. கந்தர் அனுபூதியின் கடைசி அடியை சொல் என்றார் மகா பெரியவா. அந்த அடியவரும் "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என பாடினார். இதற்கு பொருள் என்ன என கேட்டார் மகா பெரியவா. குருவாய் வந்து அருள் செய்ய வேண்டும் குகனே என அழைப்பதாக பொருள் என்றார் பக்தர்கள். இப்போது சிரித்தபடி விளக்கம் அளித்த மகா பெரியவா, இதற்கு இரண்டு பொருள்கள் உண்டு. வருவாய் அருள்வாய் என்றால் வா வந்து அருள் புரிய வேண்டும் என்பது ஒரு பொருள். மற்றொன்று, வருவாய் தா என்றும் ஒரு பொருள் உண்டு என்றார்.

கந்தர் அனுபூதி பாராயணம் செய்தால் வருவாய் பெருகும் என்பதில் இன்னுமா உனக்கு சந்தேகம். வேறு ஸ்லோகம் தேவையே இல்லை. கர்தர் அனுபஆதியை தொடர்ந்து பாராயணம் செய் என சொல்லி, அந்த பக்தரை அனுப்பி வைத்தார் காஞ்சி மகா பெரியவா. நம்பிக்கையுடன், பொறுமையாக பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்படியே செய்தாலும், நமது வினைப்பயன் தீர்ந்து, அது எப்போது நடக்க வேண்டும் என இருக்கிறதோ அப்போது தான் நடக்கும் என்பதை புரிந்து கொண்ட பக்தர், மகா பெரியவாவை வணங்கி விட்டு சென்றார்.