🔔 அமாவாசை, பௌர்ணமி, சஷ்டி, ஏகாதசி, சந்திராஷ்டமம் — FREE Alerts! Subscribe now →          🔔 Amavasai, Pournami, Sashti, Ekadashi, Chandrashtama — Get notified 1 day before!         
Home/கட்டுரைகள்/சந்திராஷ்டமம் நாட்களில் தவிர்க்க வேண்டியவை - What is Chandrashtamam?
Spirituality

சந்திராஷ்டமம் நாட்களில் தவிர்க்க வேண்டியவை - What is Chandrashtamam?

December 28, 2024uma684 views

 

 

சந்திராஷ்டமம் என்றால் என்ன? அந்த நாட்களில் என்ன செய்ய கூடாது

 

நமது ஜாதகத்தில் சந்திரனின் நிலையைப் பொருத்து நமது பிறந்த ராசி தீர்மானிக்கப்படுகிறது. நாம் பிறக்கும் போது சந்திரன் இருக்கும் நட்சத்திரம் நமது ஜென்ம நட்சத்திரமாகும்.

 

ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களில் சந்திரன் தனது பயணத்தைத் தொடங்குகிறார். அதனால்தான் சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தில் இருந்து சில சுப மற்றும் அசுப விளைவுகளை அனுபவிக்கிறோம்.

 

சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டே கால் நாட்கள் சஞ்சாரம் செய்கிறார். எனவே அனைவருக்கும் ஒரு மாதத்தில் இரண்டரை நாட்கள் சந்திரன் இருக்கும் காலம் சந்திராஷ்டம காலம். அஷ்டமம் என்றால் எட்டு என்று பொருள்

 

உடலுக்கும் மனதுக்கும் காரணமாக இருக்கும் சந்திரன் அஷ்டம வீட்டில் அதாவது ஜென்ம ராசிக்கு எட்டாம் வீட்டில் இருக்கும் போது சந்திராஷ்டமம் ஏற்படுகிறது. அல்லது சந்திரன் நமது ஜன்ம நட்சத்திரத்திற்கு 17 ஆம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலம் சந்திராஷ்டமம்.

 

ஜோதிடத்தில் சந்திரன் 'மனோகாரகன்' என்று அழைக்கப்படுகிறார். நமது மனதையும், எண்ணங்களையும் வழிநடத்தும் சந்திரன் எட்டாம் வீட்டில் மறைந்தால், அஷ்டமத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் இரண்டே கால் நாட்களில் உடல், மனம் என பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும். சந்திரன் அஷ்டமத்தில் இருக்கும் போது அதன் அம்சம் நமது ஜென்ம ராசியின் இரண்டாம் வீடான குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பதால் பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

 

ராசியைக் கொண்டு கணக்கிடப்படுவது :

 

ஜென்ம ராசியின் எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டமம் எனப்படும்.

 

உதாரணமாக மேஷ ராசிக்கு விருச்சிக ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் சந்திராஷ்டமம். இதேபோல் மற்ற ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள் வரும்.

 

சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்க வேண்டியவை:

 

சந்திராஷ்டம நாட்களில் நமது மனமும் எண்ணங்களும் தெளிவாக இருக்காது. எனவே, அந்த நாட்களில் முக்கியமான பேச்சுவார்த்தைகளை தவிர்க்க வேண்டும்.

 

திருமணம் போன்ற சுப காரியங்கள் நிச்சயிக்கப்படும் போது, மணமகன் மற்றும் மணமகள் இருவருக்கும் சந்திராஷ்டம நாட்கள் இருக்கக்கூடாது.

 

சந்திராஷ்டம தினங்களில் புதிய தொழில் தொடங்குவதும், புதிய முயற்சிகளையும் தவிர்ப்பதும் நல்லது.

 

சந்திராஷ்டமம் நாட்களில் கிரகப் பிரவேசம், பால் காய்ச்சுதல், வளைகாப்பு போன்ற சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

 

சந்திராஷ்டம நாட்களில் வாகனங்களை நிதானத்துடன் இயக்க வேண்டும்.

 

பணியிடங்களில் பதற்றம், கோபம், ஒருவித சோம்பல், மறதி மற்றும் வாக்குவாதங்கள் இருக்கும்.