🔔 அமாவாசை, பௌர்ணமி, சஷ்டி, ஏகாதசி, சந்திராஷ்டமம் — FREE Alerts! Subscribe now →          🔔 Amavasai, Pournami, Sashti, Ekadashi, Chandrashtama — Get notified 1 day before!         
Home/கட்டுரைகள்/சொக்கநாதரை அக்னி ரூபமாக வழிபடும் சொக்கப்பனை கொளுத்துதல் | Burning Chokkapanai, which worships Chokkanatha as Agni
Spirituality

சொக்கநாதரை அக்னி ரூபமாக வழிபடும் சொக்கப்பனை கொளுத்துதல் | Burning Chokkapanai, which worships Chokkanatha as Agni

July 2, 2024uma564 views

சொக்கநாதரை அக்னி ரூபமாக வழிபடும் சொக்கப்பனை கொளுத்துதல்

புராணங்களின்படி,  சிவபெருமான், அடிமுடி தெரியவண்ணம் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்குக் காட்சியளித்ததை நினைவூட்டும் வகையில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. கற்பக தரு என போற்றப்படும் பனைமரம் கல்பதரு என்றும் தேவமரம் என்றும் அழைக்கப்படுகிறது. பனை மரத்தின் வேர் முதல் நுனி வரை அனைத்து பொருட்களும் மனித வாழ்க்கைக்கு பங்களிக்கின்றன. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டுமே உள்ளது. 

பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீப்பிடித்தால் எரியும் தன்மை கொண்டது. பனைமரத்தைப் போல, ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் பிறருக்கு உதவி செய்தால், இந்த ஜென்மத்திலேயே தேக முக்தியை அதாவது சொர்க்கத்தைக் கண்டு முக்தி அடையலாம்.  

கார்த்திகை தீப திருவிழாவிற்கும் பனை மரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பனை மரத்தின் அனைத்து பகுதிகளும் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். மேற்கூரை அமைக்க பனை ஓலைகள், அடிக்காம்புகள் நார் எடுக்க, நுங்கு உணவாக, பதநீர் தயாரிக்க, கட்டைகள் அடுப்பு எரிய... என பனையின் அனைத்து பகுதிகளும் நமக்கு பயன்படும். மேலும் பல்வேறு கோவில்களில் பனை மரங்கள் தல விருட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பனை ஓலைகளால் கோபுர வடிவில் தீபம் ஏற்றி தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது பெரியோர்களால் நம்பப்படுகிறது. 

சொக்கப்பனை எரிக்கும் தத்துவம், ஆணவம் எரிகிறது, அறியாமை எரிகிறது. சிவபெருமான் முப்புரமும் எரிந்த வடிவத்தைக் காட்டுவதற்காக கோயில்களில் சொக்க பனை ஏற்றப்படுகிறது. சொக்கப்பனை என்பது சொர்க்கப் பனை, சொக்கர் பனை என்றும் பொருள்படும் என்கிறார்கள் அறிஞர்கள் 

விஷ்ணு கோவில்களிலும் சொக்கப்பனை திருவிழா நடைபெறும். சொக்கப்பனை எரித்த பின், அதிலிருந்து கிடைக்கும் கரியை நெற்றியில் பூசுவது வழக்கம். சாம்பலை எடுத்து வயல்களில் தூவினால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது நம்பிக்கை! 

 கார்த்திகை தீப நாளில் மாவலி சுற்றுதல்  விளையாட்டும் நடைபெறுகிறது. பாதாளத்தில் வாழும் மாவலி, தீபத் திருநாளில் பூமிக்கு வந்து தீப அலங்காரத்தைக் கண்டு மகிழ்வதால், மாவலி சுற்றுதல் என்று பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.  

நாமும் சொக்கநாதரைக் கார்த்திகை தீபத் திருநாளில் வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.