வேல் மாறல் மகா மந்திரம்

வேல் மாறல் மகா மந்திரமாகும்,அருணகிரிநாத சுவாமிகள் பாடியருளிய சீர்பாத வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, வேல் வகுப்பு என்ற திருவகுப்புகள் உடல் நோயையும், உயிர்ப்பிணியையும் நீக்கவல்ல மணி, மந்திர, ஒளஷதம் போன்றதாகும். அவை:

  • சீர்பாத வகுப்பு – மணி வகுப்பு,
  • தேவேந்திர சங்க வகுப்பு - மந்திர வகுப்பு,
  • வேல் வகுப்பு - ஔஷத (மருந்து) வகுப்பு.

முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி- வேலாயுதம். வேல் என்ற சொல்லுக்கு ‘வெல்’ என்பது மூலம். வெல்லும் தன்மையுடையது வேல். இந்த வேல் வெளிப்பகை மற்றும் உட்பகைகளான வினைகளை வேரோடு அழிக்கும்.

அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள ‘வேல் வகுப்பு’ உடல் நோய், மன நோய், உயிர் நோய் ஆகிய மூவகைப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகி, அவற்றை உடனே தீர்த்தருளவல்ல ஆற்றல் படைத்தது’ என்று உறுதி கூறிய வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் வேலுக்கு உகந்த வழிபாடாக வேல்மாறல் பாராயணத்தை தொகுத்துள்ளார். வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது.

வேல்மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப்பாட்டுடன் குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்து முருகப்பெருமான் திருவருளைப்பெறுவோமாக.


If possible, please consider supporting us to improve our services. You can send your support via Google Pay to the number: 9840675318. Thank you!
முடிந்தால், எங்கள் சேவைகளை மேம்படுத்த எங்களுக்கு ஆதரவளிக்கவும். உங்கள் ஆதரவை Google Pay மூலம் 9840675318 என்ற எண்ணிற்கு அனுப்பலாம். நன்றி!


Download PDF