"வாழ்க்கை என்றாலே துன்பங்களும் துயரங்களும் இருக்கத் தான் செய்யும். அது தான் நியதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்."

— புத்தர்(Buddha)

"நீ செய்த செயல்கள் ஒவ்வொன்றும் உன் நிழல் போல உன்னை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அது நல்லதா இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி."

— புத்தர்(Buddha)

"நமது உதடுகளை அரண்மனை வாயிற் கதவுகளைப் போல பாதுகாக்க வேண்டும். நமது வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் சாந்தமானதாகவும் இதமாகவும் இருக்க வேண்டும்."

— புத்தர்(Buddha)

"நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும்."

— புத்தர்(Buddha)

"போரில் ஆயிரம் பேரை வெல்வதை காட்டிலும் சிறந்தது உன் மனதை நீ வெற்றி கொள்வது."

— புத்தர்(Buddha)

"செல்வத்தின் இயல்பு வளர்வதும் தேய்வதும். செல்வம் என்றைக்கும் ஒரு இடத்தில் நிலைத்திருப்பது கிடையாது."

— புத்தர்(Buddha)

"ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான். ஒருவன் என்னை அடித்தான். என்று அடுத்தவனைப்பற்றியே ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய கோபம் ஒருபோதும் தணியாது."

— புத்தர்(Buddha)

"ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்."

— புத்தர்(Buddha)

"மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை. அவன் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறான்."

— புத்தர்(Buddha)

"அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே. பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி."

— புத்தர்(Buddha)

"அதிகமாக பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான்."

— புத்தர்(Buddha)

"பிராத்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான்."

— புத்தர்(Buddha)

"நீ எதுவாக ஆகிறாயோ அதுவாகவே ஆகிறாய்."

— புத்தர்(Buddha)

"சிந்தனை எதுவோ அதுவாகவே நீ ஆகிறாய்."

— புத்தர்(Buddha)

"இரத்தம் வராமல் ஒருவரை கொன்றுவிடும் கூர்மையான ஆயுதம் மனிதனின் நாக்கு."

— புத்தர்(Buddha)

"மகானை போல நீ வாழ வேண்டும் என்றில்லை மனசாட்சியின் படி வாழ்ந்தாலே போதும்."

— புத்தர்(Buddha)

"எண்ணங்கள் ஈடேற வேண்டும் என்றால் நல்ல எண்ணங்களை மட்டுமே விதைக்க கற்றுக்கொள்."

— புத்தர்(Buddha)

"போரில் ஆயிரம் பேரை வெல்வதை விட சிறந்தது உன் மனதை வெற்றி கொள்வது."

— புத்தர்(Buddha)

"அமைதியை விட உயர்வான சந்தோஷம் இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை"

— புத்தர்(Buddha)

"நிம்மதிக்கான இரண்டு வழிகள் விட்டுக்கொடுங்கள் இல்லையேல் விட்டுவிடுங்கள்."

— புத்தர்(Buddha)