ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியும் அதன் சிறப்புக்களும் /Every month's full moon and its special features

Mageshwari 135 25/10/2023
 ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியும் அதன் சிறப்புக்களும் /Every month's full moon and its special features

ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியும் அதன் சிறப்புக்களும்...

சித்திரை பௌர்ணமி:

                சித்திரை மாதம் வரும் பௌர்ணமியை சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறார்கள். சித்திரை மாதத்தில் பொதுவாக சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது. சித்திர குப்தனின் பிறந்த நாளாக சித்திரை பௌர்ணமி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் ஆயுள் நீடிக்கும், மரண பயம் நீங்கும், குழந்தை பாக்கியம் உண்டாகும்.

 

வைகாசி பௌர்ணமி:

வைகாசி மாதத்தில் பௌர்ணமி பொதுவாக விசாக நட்சத்திரத்தில் வருகிறது.  இந்த தினத்தில் தமிழ் கடவுளான முருகரின் பிறந்த தினமாகவும், புத்தர் பிறந்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது. வைகாசி பௌர்ணமி அன்று விளக்கேற்றி வழிபட்டால் அறிவு மேம்படும்.

 

ஆனி பௌர்ணமி:

ஆனி பௌர்ணமியில் பொதுவாக மூல நட்சத்திரத்தில் வருகிறது. ஆனி பௌர்ணமி அன்று இறைவனுக்கு முக்கனிகள் படைக்கப்படுகின்றன. இந்த தினத்தில் விளக்கேற்றி வழிபட்டால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். சுமங்கலித்தன்மை நிலைத்திருக்கும். ஆனி பௌர்ணமி அன்று கண்ணனை நினைத்து விரதம் இருந்தால் காதல் கைகூடும் என்று கூறப்படுகிறது.

 

ஆடி பௌர்ணமி:

ஆடி பௌர்ணமியில் பொதுவாக உத்திராட நட்சத்திரத்தில் வருகிறது. ஆடி மாதத்தில் திருமாலை வழிபாடு செய்வது நன்று. இந்த தினத்தில் விளக்கேற்றி வழிபட்டால் பதவி, குடும்பத்தில் வளர்ச்சி, அமைதி அனைத்தும் உண்டாகும்.

 

ஆவணி பௌர்ணமி:

ஆவணி பௌர்ணமியில் பொதுவாக அவிட்ட நட்சத்திரத்தில் வருகிறது. ஆவணி பௌர்ணமி அன்று ஓணமும், ரக்சாபந்தனும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் விளக்கேற்றி வழிபட்டால் தொல்லை தீரும். சகோதர வாழ்வு உண்டாகும்.

 

புரட்டாசி பௌர்ணமி:

புரட்டாசி பௌர்ணமியில் பொதுவாக உத்திரட்டாதியில் வருகிறது. இந்த தினத்தில் அம்மை,அப்பர் வழிபாடு செய்தால் கடன் தொல்லையை நீக்கும். அனைத்து காரியத் தடங்கல்களும் நீங்கும். இந்த தினத்தில் விளக்கேற்றி வழிபட்டால் சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

 

ஐப்பசி பௌர்ணமி:

ஐப்பசி பௌர்ணமியில் பொதுவாக அசுவனியில் வருகிறது.ஐப்பசி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்னாபிசேகம் நடத்தப்படுகின்றது. இன்றைய தினத்தில் விளக்கு ஏற்றி வழிபட விருப்பங்கள் நிறைவேறும்.அனைத்து காரியங்களிலும் வெற்றி கைகூடும்.

 

கார்த்திகை பௌர்ணமி: 

கார்த்திகை பௌர்ணமியில் பொதுவாக கார்த்திகை நட்சத்திரத்தில் வருகிறது.இந்த தினத்தில் இறைவன் ஜோதிப்பிழம்பாக காட்சியளித்தார்.ஆலயங்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினத்தில் விளக்கேற்றி  வழிபட்டால்  மனக்கவலைகள் தீரும், கண்நோய் நீங்கும்.அனைத்து  நன்மைகளும் கிடைக்கும்.

மார்கழி பௌர்ணமி:

மார்கழி பௌர்ணமியில் பொதுவாக திருவாதிரையில் வருகிறது.இந்த தினத்தில் சிவபெருமான் ஆனந்த நடனமாடி நடராஜராக காட்சியளித்த நாள்.அதனால் மார்கழி பௌர்ணமி அன்று நடராஜருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றது.அன்றைய தினத்தில் விளக்கேற்றி  வழிபட்டால் நோய்கள் குணமாகும்.

தை பௌர்ணமி:

தை பௌர்ணமியில் பொதுவாக பூசத்தில் வருகிறது.இந்த தினத்தில் சிவன் மற்றும் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தை பௌர்ணமியில் விளக்கேற்ற ஆயுள் விருத்தி கிடைக்கும். 

மாசி பௌர்ணமி:

மாசி பௌர்ணமியில் பொதுவாக மகத்தில் வருகிறது.இன்றைய தினத்தில் நீர்நிலைகளில் நீராடுவது சிறப்பானது.கும்பமேளா, மாசி மகம் போன்ற விழாக்கள் மாசி பௌர்ணமியில் நடத்தப்படுகின்றன.அன்றைய தினத்தில் விளக்கேற்றி  வழிபட்டால் நற்கதி கிடைக்கும்.

பங்குனி பௌர்ணமி:

பங்குனி பௌர்ணமியில் பொதுவாக உத்திரத்தில் வருகிறது.அன்றைய தினத்தில்தான் பார்வதி-பரமேஸ்வரர், முருகன்-தெய்வயானை, ராமன்-சீதை உள்ளிட்ட தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றன.இந்த தினத்தில் விளக்கேற்றி  வழிபட்டால் துன்பங்கள் நீங்கி நற்கதி கிடைக்கும்.

கிரிவலம்:

பொதுவாக பௌர்ணமியில் கிரிவலம் செய்வது நன்று.மலையினை சுற்றி வருவதால் மனத்திற்கு அமைதியும்,  ஆரோக்கியமும் உண்டாகும்.